Skip to main content

Posts

Showing posts from March, 2013

ஹலால் சான்றிதழ் தொடர்பில் முஸ்லிம்களிடம் ஒத்த கருத்தில்லை

முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் 33 சம்பவங்கள் இடம்பெற்ற பின்பும் அரசாங்கம் மௌனம் காக்கிறது. அரசு இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்காது. என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அங்கத்தவர்கள் சேர்த்துக் கொள்வதற்காக அக்குறணை நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; அக்குறணை பிரதேசம் கண்டி மன்னரால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதாகும். போர்த்துக்கேயர்கள் அக்குறணை வழியாகக் கண்டிக்குச் செல்ல முயற்சித்த போது அக்குறுணையில் அவர்களைத் தடுத்து வைத்து தாமதப்படுத்தி கண்டி மன்னனுக்கு விடயத்தை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக புத்தரின் புனித தந்தத்தை ஹங்குரங்கெத்த பிரதேசத்துக்குக் கொண்டு சென்று பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. இன்று முஸ்லிம்களுக்கு எதிராக சில சக்திகள் களத்தில் இறங்கி உள்ளன. அரசாங்கம் இதனைப் பார்த்துக்கொண்டு மௌனம் காக்கிறது. நான் இதைப் பற்றிப் பாராளுமன்றத்தில் பேசிய போது என்னைக் குற்றம் கூறுகின்

மின்கட்டணம் இம்மாதத்திலிருந்து 20 முதல் 30 வீதம் அதிகரிக்கப்படும்

ந. ஜெயகாந்தன்; மின் கட்டணத்தை 20 முதல் 30 வீதத்திற்குள் அதிகரிக்கும் திட்டமொன்று அரசாங்கத்திடம் காணப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ள மின்சார சபையின் தேசிய ஊழியர் சங்கம் சிலவேளை இந்த அதிகரிப்பு இந்த மாதத்திலிருந்தே இடம்பெறலாமெனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சார சபை தேசிய ஊழியர் சங்கத் தலைவர் வீரசேகர தெரிவிக்கையில் : 20 முதல் 30 வீதத்திற்குள் மின்கட்டணத்தை அதிகரிக்கும் திட்டமொன்று தற்போது காணப்படுகின்றது. இந்த அதிகரிப்புக்குத் தேவையான அனுமதியும் விலை நிர்ணய ஆணைக்குழுவிடம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக எமக்கு தெரியவந்துள்ளது. இந்த அதிகரிப்பு சிலவேளை இம்மாதத்திலிருந்தே இடம்பெறலாம். இது அடுத்த மாதம் வரும் இம்மாதத்திற்குரிய கட்டணப் பட்டியலினூடாக தெரியவரலாம். அல்லது தேர்தல்கள் ஏதும் நடைபெறவிருந்தால் அந்த அதிகரிப்பை பிற்போடக் கூடும் என்றார். இதேவேளை மின் சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியோ இப்போதைக்கு மின்கட்டணம் அதிகரிக்கப்படப் போவதில்லை எனத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது